Videos

TNPSC Pothu Tamil திருக்குறள்

TNPSC  Pothu Tamil திருக்குறள்

TNPSC  Pothu Tamil திருக்குறள், 6ம் வகுப்பு செய்யுள் திருக்குறள், 6th 3 Term Books Download PDF tnpsc pothu tamil tamil திருக்குறள் சிறப்புகள் pothu tamil tnps, pothu tamil, pothu tamil 100, pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil,கட்டுரை திருக்குறள் tnpsc,tnpsc tamil,thirukkural group 4 tamil,group 4 tamil,tnpsc pothu tamil பொதுதமிழ்,திருக்குறள் பற்றிய வினா விடைகள்,tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.

TNPSC  Pothu Tamil திருக்குறள் 6ம் வகுப்பு செய்யுள்
TNPSC - TNTETB | 6ம் வகுப்பு செய்யுள்


திருவள்ளுவர் :
  • ஆசிரியர் திருவள்ளுவர்.காலம்: கி.மு. 31 ம் நூற்றாண்டு
  • பெற்றோர் ஆதிபகவன் மனைவி வாசுகி மயிலாப்பூர் (சென்னை). 
  • சமயம் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பர்.
  • திருவள்ளுவரின் வேறுபெயர்கள் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில் புலவர், தேவர்
திருவள்ளுவரின் சிறப்புகள் : 
  • மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு கோவில் உள்ளது. 
  • வள்ளுவர் கோட்டம் நுங்கம் பாக்கத்தில் உள்ளது.
  • திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் உள்ளது. உயரம் 133 அடி, தமிழகத்தில் மிக உயர்ந்த சிலை.
  • கி.மு. 31 ஐக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. கணக்கிடும் முறை கி.மு. 31 + 2018 = 2049
  • தைத்திங்கள் 2-ம் நாள், திருவள்ளுவர் தினம் ஆக கொண்டாடப்படுகிறது.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர்.
திருக்குறள் :
  • திரு + குறள் - திருக்குறன், குறள் - குறுகிய அடி உடையது ஏழு சீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது.
  • திரு என்பது நூலின் அடைமொழியைக் குறிக்கும். (அடையெடுத்த கருவியாருபெயர்)
  • திருக்குறன் சங்கம் மருவிய இலக்கியம் ஆரும்,
  • திருக்குறள் பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று இது அமநூல் (அ) தீதி நூல் எனப்படும்
  • திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கில் அதிக பாடல்களைக் கொண்ட நூல்
  • செய்யுளால் பெயர் பெற்ற நூல், அடியால் பெயர் பெற்ற நூல் 
  • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெருமை வாய்ந்த நூல்
திருக்குறள் அமைப்பு :
  • திருக்குறள் 133 அதிகாரங்களாக ஒரு அதிகாரத்திற்கு 10 பாடலாக உள்ளது. 1330 பாடல்களைக் (குறள்) கொண்டது. 9 இயல்களைக் கொண்டது.
TNPSC  Pothu Tamil திருக்குறள்
திருக்குறள் 3 பிரிவுகளைக் கொண்டது.

பிரிவுகள்
  1. அறத்துப்பால்
  2. பொருட்பால்
  3. காமத்துப்பால்
அதிகாரங்கள்
  1. 38 அதிகாரங்கள்
  2. 70 அதிகாரங்கள்
  3. 25 அதிகாரங்கள்
இயல்கள்
  1. பாயிரவியல்-4, இல்லறவியல்-20, துறவறவியல்-13, ஊழியல்-1
  2. அரசியல் -25, அங்கவியல் -32, ஒழிபியல்-13
  3. களவியல் - 7, கற்பியல் 18
திருக்குறளின் சிறப்புகள் :
  • மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை தான் திருக்குறள் 
  • இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா நாள்தோறும் கண்டவிழிந்ததும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள்.
  • திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது. 
  • திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
  • ஏழு என்னும் என்னுப்பெயர் எட்டுக் குறட்பாவில் இடம் பெற்றுள்ளது. 
  • அதிகாரங்கள் 133. அதன் கூட்டுத்தொகை 7.மொந்த குறட்பாக்கள் 1330.இதன் கூட்டுத்தொகை 7
  • உருசிய நாட்டில் அணுநுளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
  • இங்கிரந்து நாட்டு காட்சி சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
திருக்குறளின் சிறப்புப்பெயர்கள் : முப்பால், பொதுமறை, தமிழ்மறை, பொருநரை உலகப்பொதுமறை, உத்திரவேதம், தெய்வநூல், வாயுறை வாழ்த்து, திருவள்ளுவப் பயன், பொய்ய! மொழி, இயற்கை வாழ்வில்லம், முதமொழி.

TNPSC  Pothu Tamil திருக்குறள்
  • தமிழுக்குக்கதி (கம்பராமாயணமும்திருக்குள்ளும்). நாலும் இரண்டும் (நாலடியார். திருக்குறல்")
  • தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று அனைவராலும் பாராட்டப்பெறும் நூல் திருக்குறள், 
  • திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
  1. அன்புடைமை 
  2. அடக்கமுடைமை 
  3. ஒழுக்கமுடைமை
  4. பொறையுடைமை
  5. அருளுடைமை
  6. அறிவுடைமை
  7. ஊக்கமுடைமை
  8. ஆள்வினையுடைமை 
  9. பண்புடைமை
  10. நாணுடைமை
  • திருக்குறள்  கரத்தில் தொடங்கி  கரத்தில் முடிகிறது
  • திருக்குறளில் இடம்பெறாத தமிழ்சொற்கள் கடவுள், தமிழ்,தமிழ்நாடு,மூவேந்தர், காவிரி, இமயம் 
  • திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரத் தலைப்பு குறிப்பறிதல் (71 மற்றும் 110வது அதிகாரம்)
திருக்குறளின் உரையும், பதிப்பும் : 
  • பழங்காலத்திலேயே திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்:
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர் மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்
  • திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் மிகச் சிறந்த உரை பரிமேலழகர் உரை 
  • 1812ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டவர் மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம்
மொழிபெயர்ப்பு:
  • திருக்குறளை வீரமாமுனிவர் இலத்தீன் மொழியிலும் கி.பி. 1730, ஜி.யூ.போப் கி.பி.1886 ல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.
  1. பிரெஞ்சு -ஏரியல்.
  2. ஜெர்மன்- டாக்டர் கிரௌல்
  3. உருசியமொழி -தால்சுதாய்,யூரிகில்ஷோ
  4. பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவரையும், திருக்குறளையும் பற்றிய கருத்துக்கள் : 
  • வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றவர் பாரதியார் 
  • யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப்போல் இப்பூமிதனில் யாங்கேனும் பிறந்ததில்லை - பாரதியார்
  • வள்ளுவளைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்றவர் பாரதிதாசன்
  • தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள் அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந்தொறும் ணர்வாகும் வண்ணம் எனத் திருக்குறளை புகழ்பவர் - பாரதிதாசன்ட:
  • திருக்குறள் ஒரு வருப்பார்க்கோ ஒரு மதுத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதின்று. அது மன்பதைக்கு உலகப்பொது என்றவர் திருவி.க 
  • உலக நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் கம்பரின் காவியமும் திருவள்ளுவரின் திருக்குறளும் இருந்தால் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் - டாக்டர் கால்டுவெல் 
  • திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிறாவிட்டால் தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது என்றவர் கி.ஆ.பெ விஸ்வநாதம்
  • தமிழ் அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பில்: தமிழோ என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது டாக்டர் கிரௌல் 
  • கம்பராமாயணத்தையும் திருக்குறளையும் தமிழுக்கு கதி என கூறியவர் செல்வகேசவராய முதலியார். 
வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்,
பொல்லாத தில்லை புரைதிருந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில் 
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் பாரதிதாசன் 
  • அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் - ஔவையார்
  • கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.. இடைக்காடனார்,
திருக்குறளின் சிறப்பு பற்றி கூறும் நூல்கள்:
  • திருக்குறளையும் திருவள்ளுவரையும் பழத்தமிழ்ப் புலவர்கள் பாராட்டிப் பாடிய நூல் திருவள்ளுவ மாலை (53 புலவர்கள் பாடிய 55 வெண்பாக்களை உடையது)
  • திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் திருவள்ளுவமாலை.
  • இந்நாலில் தினையளவு போதாச் சிறுபுல்தீர் என்ற பாடல் கபிலரால் பாடப்பட்டது. (இது திருவள்ளுவமாலையில் 3வது பாடல்)
  • மதுரைத் தமிழ் நாகனார், எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன் பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்" என்று பாராட்டுகிறார். 
  • “எப்பாலவரும் இயைபவே வள்ளுவுணார் முப்பால் மொழிந்த மொழி" - கல்லாடனார்.
  • திருக்குறளை திருவள்ளுவப் பயன் என்று குறிப்பிட்டவர் நச்சினார்க்கினியார் 
  • வாளும் வள்ளுவம் வா.செ குழந்தைசாமி வணக்கம் வள்ளுவம் ----- ஈரோடு தமிழன்பன்
மறைமலையடிகள் கூறிய கருத்தான "கிறிஸ்துவக்கு முற்பட்ட முப்பது ஆண்டுகள்" என்பதையே தற்போது திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக கணக்கிட்டு தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம்,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.