TNPSC Pothu Tamil திருக்குறள்
TNPSC Pothu Tamil திருக்குறள், 6ம் வகுப்பு செய்யுள் திருக்குறள், 6th 3 Term Books Download PDF tnpsc pothu tamil tamil திருக்குறள் சிறப்புகள் pothu tamil tnps, pothu tamil, pothu tamil 100, pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil,கட்டுரை திருக்குறள் tnpsc,tnpsc tamil,thirukkural group 4 tamil,group 4 tamil,tnpsc pothu tamil பொதுதமிழ்,திருக்குறள் பற்றிய வினா விடைகள்,tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
திருவள்ளுவர் :
- ஆசிரியர் திருவள்ளுவர்.காலம்: கி.மு. 31 ம் நூற்றாண்டு
- பெற்றோர் ஆதிபகவன் மனைவி வாசுகி மயிலாப்பூர் (சென்னை).
- சமயம் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்பர்.
- திருவள்ளுவரின் வேறுபெயர்கள் செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர், பொய்யில் புலவர், தேவர்
- மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு கோவில் உள்ளது.
- வள்ளுவர் கோட்டம் நுங்கம் பாக்கத்தில் உள்ளது.
- திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரியில் உள்ளது. உயரம் 133 அடி, தமிழகத்தில் மிக உயர்ந்த சிலை.
- கி.மு. 31 ஐக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. கணக்கிடும் முறை கி.மு. 31 + 2018 = 2049
- தைத்திங்கள் 2-ம் நாள், திருவள்ளுவர் தினம் ஆக கொண்டாடப்படுகிறது.
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர்.
திருக்குறள் :
- திரு + குறள் - திருக்குறன், குறள் - குறுகிய அடி உடையது ஏழு சீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆனது.
- திரு என்பது நூலின் அடைமொழியைக் குறிக்கும். (அடையெடுத்த கருவியாருபெயர்)
- திருக்குறன் சங்கம் மருவிய இலக்கியம் ஆரும்,
- திருக்குறள் பதினென் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று இது அமநூல் (அ) தீதி நூல் எனப்படும்
- திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கில் அதிக பாடல்களைக் கொண்ட நூல்
- செய்யுளால் பெயர் பெற்ற நூல், அடியால் பெயர் பெற்ற நூல்
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெருமை வாய்ந்த நூல்
திருக்குறள் அமைப்பு :
- திருக்குறள் 133 அதிகாரங்களாக ஒரு அதிகாரத்திற்கு 10 பாடலாக உள்ளது. 1330 பாடல்களைக் (குறள்) கொண்டது. 9 இயல்களைக் கொண்டது.
TNPSC Pothu Tamil திருக்குறள்
திருக்குறள் 3 பிரிவுகளைக் கொண்டது.
பிரிவுகள்
- அறத்துப்பால்
- பொருட்பால்
- காமத்துப்பால்
- 38 அதிகாரங்கள்
- 70 அதிகாரங்கள்
- 25 அதிகாரங்கள்
- பாயிரவியல்-4, இல்லறவியல்-20, துறவறவியல்-13, ஊழியல்-1
- அரசியல் -25, அங்கவியல் -32, ஒழிபியல்-13
- களவியல் - 7, கற்பியல் 18
திருக்குறளின் சிறப்புகள் :
- மனிதன் மனிதனாக வாழ மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரை தான் திருக்குறள்
- இங்கிலாந்து நாட்டு மகாராணியார் விக்டோரியா நாள்தோறும் கண்டவிழிந்ததும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள்.
- திருக்குறளுக்கும் ஏழு என்னும் எண்ணிற்கும் பெரிதும் தொடர்புள்ளது.
- திருக்குறள் ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்டது.
- ஏழு என்னும் என்னுப்பெயர் எட்டுக் குறட்பாவில் இடம் பெற்றுள்ளது.
- அதிகாரங்கள் 133. அதன் கூட்டுத்தொகை 7.மொந்த குறட்பாக்கள் 1330.இதன் கூட்டுத்தொகை 7
- உருசிய நாட்டில் அணுநுளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது
- இங்கிரந்து நாட்டு காட்சி சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
திருக்குறளின் சிறப்புப்பெயர்கள் : முப்பால், பொதுமறை, தமிழ்மறை, பொருநரை உலகப்பொதுமறை, உத்திரவேதம், தெய்வநூல், வாயுறை வாழ்த்து, திருவள்ளுவப் பயன், பொய்ய! மொழி, இயற்கை வாழ்வில்லம், முதமொழி.
TNPSC Pothu Tamil திருக்குறள்
- தமிழுக்குக்கதி (கம்பராமாயணமும், திருக்குள்ளும்). நாலும் இரண்டும் (நாலடியார். திருக்குறல்")
- தமிழ் மாதின் இனிய உயிர்நிலை என்று அனைவராலும் பாராட்டப்பெறும் நூல் திருக்குறள்,
- திருக்குறளில் பத்து அதிகாரப் பெயர்கள் உடைமை என்னும் சொல்லில் அமைந்துள்ளன.
- அன்புடைமை
- அடக்கமுடைமை
- ஒழுக்கமுடைமை
- பொறையுடைமை
- அருளுடைமை
- அறிவுடைமை
- ஊக்கமுடைமை
- ஆள்வினையுடைமை
- பண்புடைமை
- நாணுடைமை
- திருக்குறள் அ கரத்தில் தொடங்கி ன கரத்தில் முடிகிறது
- திருக்குறளில் இடம்பெறாத தமிழ்சொற்கள் கடவுள், தமிழ்,தமிழ்நாடு,மூவேந்தர், காவிரி, இமயம்
- திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரத் தலைப்பு குறிப்பறிதல் (71 மற்றும் 110வது அதிகாரம்)
திருக்குறளின் உரையும், பதிப்பும் :
- பழங்காலத்திலேயே திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்:
தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிதி, பரிமேலழகர், திருமலையர் மல்லர், பரிப்பெருமாள், காளிங்கர்
- திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்
- திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் மிகச் சிறந்த உரை பரிமேலழகர் உரை
- 1812ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டவர் மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம்
- திருக்குறளை வீரமாமுனிவர் இலத்தீன் மொழியிலும் கி.பி. 1730, ஜி.யூ.போப் கி.பி.1886 ல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளார்.
- பிரெஞ்சு -ஏரியல்.
- ஜெர்மன்- டாக்டர் கிரௌல்
- உருசியமொழி -தால்சுதாய்,யூரிகில்ஷோ
- பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாக 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றவர் பாரதியார்
- யாமறிந்த புலவர்களிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப்போல் இப்பூமிதனில் யாங்கேனும் பிறந்ததில்லை - பாரதியார்
- வள்ளுவளைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்றவர் பாரதிதாசன்.
- தெள்ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள் அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந்தொறும் ணர்வாகும் வண்ணம் எனத் திருக்குறளை புகழ்பவர் - பாரதிதாசன்ட:
- திருக்குறள் ஒரு வருப்பார்க்கோ ஒரு மதுத்தார்க்கோ ஒரு நிறத்தார்க்கோ ஒரு மொழியார்க்கோ ஒரு நாட்டார்க்கோ உரியதின்று. அது மன்பதைக்கு உலகப்பொது என்றவர் திருவி.க
- உலக நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் கம்பரின் காவியமும் திருவள்ளுவரின் திருக்குறளும் இருந்தால் மீண்டும் அதனை புதுப்பித்து விடலாம் - டாக்டர் கால்டுவெல்
- திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிறாவிட்டால் தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது என்றவர் கி.ஆ.பெ விஸ்வநாதம்
- தமிழ் அழகான சித்திர வேலைப்பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்ட தங்க ஆப்பில்: தமிழோ என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது டாக்டர் கிரௌல்
- கம்பராமாயணத்தையும் திருக்குறளையும் தமிழுக்கு கதி என கூறியவர் செல்வகேசவராய முதலியார்.
பொல்லாத தில்லை புரைதிருந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் பாரதிதாசன்
- அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் - ஔவையார்
- கடுகைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.. இடைக்காடனார்,
திருக்குறளின் சிறப்பு பற்றி கூறும் நூல்கள்:
- திருக்குறளையும் திருவள்ளுவரையும் பழத்தமிழ்ப் புலவர்கள் பாராட்டிப் பாடிய நூல் திருவள்ளுவ மாலை (53 புலவர்கள் பாடிய 55 வெண்பாக்களை உடையது)
- திருக்குறளின் பெருமையை உணர்த்தும் நூல் திருவள்ளுவமாலை.
- இந்நாலில் தினையளவு போதாச் சிறுபுல்தீர் என்ற பாடல் கபிலரால் பாடப்பட்டது. (இது திருவள்ளுவமாலையில் 3வது பாடல்)
- மதுரைத் தமிழ் நாகனார், எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன் பால் இல்லாத எப்பொருளும் இல்லையால்" என்று பாராட்டுகிறார்.
- “எப்பாலவரும் இயைபவே வள்ளுவுணார் முப்பால் மொழிந்த மொழி" - கல்லாடனார்.
- திருக்குறளை திருவள்ளுவப் பயன் என்று குறிப்பிட்டவர் நச்சினார்க்கினியார்
- வாளும் வள்ளுவம் வா.செ குழந்தைசாமி வணக்கம் வள்ளுவம் ----- ஈரோடு தமிழன்பன்
மறைமலையடிகள் கூறிய கருத்தான "கிறிஸ்துவக்கு முற்பட்ட முப்பது ஆண்டுகள்" என்பதையே தற்போது திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக கணக்கிட்டு தமிழ் புத்தாண்டை கொண்டாடுகிறோம்,