6th Tamil Seiyul குற்றாலக் குறவஞ்சி
TNPSC - TNTET | Online Study
6th Tamil Seiyul குற்றாலக் குறவஞ்சி TNPSC - TNTET | Online Study. 6ம் வகுப்பு செய்யுள் tnpsc pothu tamil tamil 100, 6th 3 Term Books Download PDF pothu tamil tips,group 4 pothu tamil,thirukkural in tamil,gk in tamil,tnpsc group 4 pothu tamil பொதுதமிழ், TN SAMACHEER KALVI FULL GUIDE. tamil gk questions,திருக்குறள் பற்றிய வினா விடைகள் part 2,thirukkural important questions in tamil. 6TH STATNDARD ALL IMPORTANT STUDY MATERIALS.
குற்றாலக் குறவஞ்சி
- காதல் வயப்பட்ட பெண்ணிடம் குறத்தி ஒருத்தி ஆடிப்பாடி தலைவனைப் புகழ்ந்து பாடும் நல் குறம்.
- குற்றாலக்குறவஞ்சி குற்றாலத்தில் உள்ள குறும்பலா ஈஸ்வரர் மேல் பாடப்பட்டது.
- 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
- பாட்டுடைத் தலைவன் திருக்குற்றால நாதர். தலைவி வசந்த வல்லி
- ஆசிரியர் திரிகூடராசப்பக் கவிராயர்.ஊர் மேலகரம்
- ஓசை நயமிக்க பாடல்கள் இந்நூலில் மிகுந்துள்ளன.
- வேறுபெயர் குறம், குறத்திப்பாட்டு, குறவஞ்சி நாடகம், குடிமக்கள் காப்பியம்
- வேறு நூல்கள்: திருக்குற்றால மாலை, திருக்குற்றால உலா, திருக்குற்றாலப்பிள்ளைத்தமிழ், திருக்குற்றால சிலேடை வெண்பா
குற்றால மலையின் வளம்
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்கூனல்இளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே!
- திரிகூட ராசப்பக் கவிராயர்
ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்---ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு---- வருந்தக் காண்பது சூல்உளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து ----புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி----திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே!
- திரிகூட ராசப்பக் கவிராயர்