Videos

பணமதிப்பு குறைப்பு - Economics TNPSC Online Study

பணமதிப்பு குறைப்பு - Economic Reform Advisory Committees | TNPSC - Online Study

பணமதிப்பு குறைப்பு.பணமதிப்பு குறைப்பு TNPSC Economics Questions in Tamil pdf.  (ECONOMY) பணமதிப்பு குறைப்பு. TNPSC Economics Important Notes in Tamil for Group 2, Gr 2A, Gr 4, VAO Economy TN Start Board Syllabus Important Notes. tnpsc economics syllabus. Economics Online Test. TNPSC Economics study materials in Tamil medium and English Medium for Group 1, Group 2, Group 2A, Group 4 and VAO  and also State Competitive Exams like TNUSRB, TRB, TET, TNEB, etc. TNPSC Online Study also provided the Topic wise Previous Year TNPSC Economy Questions and also other exams for you. TN Samacheer kalvi Guide.

பணமதிப்பு குறைப்பு | TNPSC - Online Study

 பணமதிப்பு குறைப்பு 

  • உலகச் சந்தையிலுள்ள பணங்களின் மதிப்புகளுக்கு ஒப்ப நம் பணத்தின் மதிப்பைக் குறைப்பதற்கு பணமதிப்பு குறைப்பு என்று பெயர்.
  • பணமதிப்பு குறைப்பு செய்வதன் மூலம் ஏற்றுமதி பெருகி இறக்குமதி குறைய வாய்ப்பு ஏற்படுகிறது.
  • பாதக வணிகச் சமநிலையை சீர்செய்து சாதக வணிகச் சமநிலையை ஏற்படுத்த பணமதிப்பு குறைப்பு செய்யப்படுகிறது.
  • இந்தியாவில் இதுவரை நான்கு முறை பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
  • ஜூன் 1949 (30.5%), ஜூன் 1966 (57%), ஜூலை 1, 1991 (9%), ஜூலை 3,1991 (11%) ஆகிய ஆண்டுகளில் இந்தியாவில் பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டது.
  • இந்தியாவில் முதன்முறையாக பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டபோது நிதி அமைச்சராக இருந்தவர்ஜான மாத்தாய் (1949),>
  • இந்தியாவில் இரண்டாவது முறையாக பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டபோது நிதி அமைச்சராக இருந்தவர் சச்சிந்தர சௌத்ரி (1966).
  • இந்தியாவில் மூன்றாவது. மற்றும் நான்காவது முறையாக பணமதிப்பு குறைப்பு செய்யப்பட்டபோது நிதி அமைச்சராக இருந்தவர் மன்மோகன் சிங் (1991)
  • பணப் புழக்க ஒழிப்பு (Demonitization of currency) என்பது கள்ளச் சந்தையை தடுப்பதற்காக அதிக மதிப்புள்ள பணத்தை பணப் புழக்கத்திலிருந்து வாபஸ் பெறுவதாகும்.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள்

  • 2000-ம் ஆண்டுக்கான ஏற்றுமதி இறக்குமதி கொள்கையில் சிறப்பு பொருளாதார மண்டலக் கொள்கை அறிவிக்கப்பட்டது.
  • சிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் மே 2005- பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு பிப்ரவரி 10, 2006 முதல் நடைமுறைக்கு வந்தது. (SEZAct)
  • சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வளர்ச்சிக்காக இறக்குமதி செய்யப்படும்
  • பொருள்களுக்கு சுங்க மற்றும் கலால் வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • தொடக்கத்தில் இந்தியாவில் முக்கிய ஏற்றுமதி மண்டலங்களாக இருந்த இடங்கள் சிறப்பு பொருளாதார மண்டலங்களாக அறிவிக்கப்பட்டன.
  • கண்டலா, சூரத் (குஜராத்), சான்டா க்ரூஸ் (மகாராஷ்ட்ரா), கொச்சின் (கேரளா), சென்னை (தமிழ்நாடு), நொய்டா (உ.பி.). ஃபால்டா (மேற்கு வங்காளம்), விசாகப்பட்டினம் (ஆந்திரா) ஆகிய எட்டும் இந்தியாவில் தொடங்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களாகும்.
  • பின் வந்த ஆண்டுகளில் மேலும் 20 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.
  • மேலும் 105 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு கொள்கை ரீதியான அனுமதி கொடுக்கப்பட்டது.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்க மத்திய, மாநில அரசின் பல்வேறு துறை ஒப்புதல்களும் ஒற்றைச்சாளர முறையில் வழங்கப்படுகின்றன.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மத்திய விற்பனை வரிகளிலிருந்து விலக்கு பெறுகின்றன.
  • 2004-05-ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வழியாக ரூபாய் 18,000 கோடிகளுக்கு மேல் ஏற்றுமதி செய்யப்பட்டது.
  • 2005-06-ம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வழியாக செய்யப்பட்ட ஏற்றுமதி ரூபாய் 22,500 கோடிகளைத் தாண்டியது.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்களின் வளர்ச்சி 2004-05-ம் ஆண்டில் 32% ஆகவும் 2005-06-ம் ஆண்டுகளில் 23% ஆகவும் இருந்தது.
  • நாடு முழுவதும் நிறுவப்பட்ட 900 க்கும் மேற்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலங்களின் மூலம் 1,00,000-க்கும் மேற்பட்டோர் (40% பெண்கள்) வேலைவாய்ப்பு பெற்றனர்.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களிலிருந்து மட்டும் விலக்கு கிடையாது.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்தாக விவசாய நிலங்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுவதற்கு மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
  • டாடா நிறுவனம் தனது நானோ கார் கம்பெனியை மேற்கு வங்காளத்தில் நிறுவுவதற்கு ஏற்பட்ட கடும் எதிர்ப்பின் காரணமாக அந்த கம்பெனியை குஜராத்தில் நிறுவியது.
  • சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியாவுக்குள் இருக்கும் வெளிநாட்டு பகுதிகளாகக் கருதப்படுகின்றன.

அந்நிய முதலீடு

  • திட்டக்குழு II-ம் ஐந்தாண்டு திட்ட காலத்தில் அந்நிய முதலீட்டை 15 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
  • ஒன்பதாவது திட்டக் காலத்தில் அந்நிய முதலீடு 3.7 பில்லியன் டாலராகவும் 10 வது திட்ட காலத்தில் (முதல் 4 ஆண்டுகளில்) 5.4 பில்லியன் டாலராகவும் இருந்தது.
  • வெளிநாட்டு முதலீட்டின் இரண்டு வகைகள் நேரடி முதலீடு (Direct investment) மற்றும் நிறுவன முதலீடு (Institutional Investment) ஆகும்.
  • நாட்டின் பொருளாதார வலிமைக்கு நிறுவன முதலீட்டை விட நேரடி முதலீடே அதிகம் விரும்பப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.