ரிசர்வ் வங்கியும் பணக்கொள்கையும் - Economic Reform Advisory Committees | TNPSC - Online Study
Reserve Bank and Monetary Policy.ரிசர்வ் வங்கியும் பணக்கொள்கையும் TNPSC Economics Questions in Tamil pdf. (ECONOMY) ரிசர்வ் வங்கியும் பணக்கொள்கையும். TNPSC Economics Important Notes in Tamil for Group 2, Gr 2A, Gr 4, VAO Economy TN Start Board Syllabus Important Notes. tnpsc economics syllabus. Economics Online Test. TNPSC Economics study materials in Tamil medium and English Medium for Group 1, Group 2, Group 2A, Group 4 and VAO and also State Competitive Exams like TNUSRB, TRB, TET, TNEB, etc. TNPSC Online Study also provided the Topic wise Previous Year TNPSC Economy Questions and also other exams for you. TN Samacheer kalvi Guide.
ரிசர்வ் வங்கியும் பணக்கொள்கையும்
- இந்திய அரசாங்கத்தின் தலைமை வங்கி RBI.
- தனிநபர் கணக்கு தொடங்க முடியாத வங்கி RBI,
- அரசாங்கத்தின் வங்கி (Banker to the Government) எனப்படுவதே RBI.
- மற்ற வங்கிகளைக் கட்டுப்படுத்துவதால், RBI வங்கிகளின் வங்கி (Bankers Bank) எனப்படும்.
- நட்டமடைந்த, திவாலான நிறுவனங்களுக்கு கடன் தருவதால், RBI கடைசி நிலை கடன் ஈவோன் (Lender of Last Resort) எனப்படுகிறது.
- அந்நிய செலாவணியின் பாதுகாவலன் (Custodian of Foreign Exchange), கடன்களின் கட்டுப்படுத்துநர் (Controller of Credit) என்பதும் RBI.
- RBI 1935-ல் தொடங்கப்பட்டு 1949-ல் நாட்டுடமை ஆக்கப்பட்டது. RBI
- RBI-ன் தலைமை இடம் மும்பை,
- RBI வெளியிடும் ரூபாய் நோட்டுக்களில் RBI கவர்னரின் முத்திரை இருக்கும்.
இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீடு
இந்திய ரூபாய்க்கான புதிய அடையாளக் குறியீட்டை மத்திய அமைச்சரவை ஜூலை 15. 2010-ல் ஏற்றுக்கொண்டது. அந்தக் குறியீட்டை வடிவமைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் கவுகாத்தி ஐ.ஐ.டி. உதவிப் பேராசிரியருமான உதயகுமார் தர்மலிங்கம் என்பவராவார். ரூபாவை குறிக்கும் தேவநாகரி எழுத்து மற்றும் Ruppee என்பதன் முதல் எழுத்தான R ஆகியவற்றை இணைத்து புதிய ரூபாய் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ரூபாய் சின்னத்தில் காணப்படும் சமநிலைக் குறி இந்திய மூவண்ணக் கொடியை நினைவூட்டுவதோடு இந்தியா பொருளாதார சமத்துவத்தை நோக்கி நகர்வதையும் குறிப்பாக உணர்த்துகிறது.
வணிக வங்கிகள்
- 1881-ல் தொடங்கப்பட்ட Oudh Commercial Bank தான் இந்தியர்களால் தொடங்கப்பட்ட முதல் வணித வங்கி,
- இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா 1920-ல் தொடங்கப்பட்டது.
- இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா 1955-ல் State Bank of India (SBI) என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்டது.
- SBI அதன் 7 சகோதர வங்கிகளோடு சேர்ந்து மொத்தம் 8 வங்கிகளாக உள்ளது.
- 1969-ல் 14 வங்கிகளும் 1980 ல் 6 வங்கிகளும் தேசியமயமாக்கப்பட்டன.
- வங்கிகளை தேசியமயமாக்கிய இந்திய பிரதமர் இந்திரா காந்தி
- வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதின் முக்கிய.நோக்கம் வங்கிகளை விவசாயிகளுக்கு கடன் வழங்கச் செய்வது,
- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கி, நியூ பேங்க் ஆஃப் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
- செட்யூல்டு வங்கி என்பது Reserve Bank of India (RBI)ன் இரண்டாவது அட்டவணையில் இடம் பெற்ற வங்கி.
- தேசியமயமாக்கப்பட்ட மொத்த பொதுத்துறை வங்கிகள் 27. 18+14+6-1-27)
- குறைந்த பட்சம் 5 லட்சம் முதலீடு உள்ள வங்கிகளே செட்யூல்டு வங்கிகளாக முடியும்.
- வங்கிகளில் தனி நபர் தொடங்கும் கணக்கு சேமிப்புக் கணக்கு (Savings Account)
- வங்கிகளில் நிறுவனங்கள் தொடங்கும் கணக்கு நடப்புக் கணக்கு (Current Account)
- நடப்புக் கணக்கில் இருப்புக்கு மேல் பணம் எடுக்கும் வசதி (Over Draft Facility) உண்டு.
- வாடிக்கையாளர் காசோலையை முதன்முதலாக அறிமுகப்படுத்திய வங்கி Central Bank of India,
- இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தனியார் வங்கி ICICI.