Videos

TNPSC Notes அறநூல்கள் - பழமொழி நானூறு

TNPSC Notes அறநூல்கள் - பழமொழி நானூறு

TNPSC Notes அறநூல்கள் - பழமொழி நானூறு. TNPSC Group 1, Group 2, Group 4  Thirukkural Notes. TNPSC Pothu Tamil Important Notes. TNPSC Kalvi Imayam Online Study. TNPSC Free Study Materials.

TNPSC Pothu Tamil Notes 


பழமொழி நானூறு

 

·        ஆசிரியர்                         :மூன்றுறை அரையனார்

·        குடிப்பெயர்                   :அரையன்

·        சமயம்                         :சமணம்

·        ஊர்                                     : மூன்றுரை - (பாண்டிய நாட்டிலுள்ள ஊர்)

·        காலம்                          : கி.பி. 4ஆம் நூற்றாண்டு

·        சிறப்புப் பெயர்        :மூதுரை, முதுமொழி, உலக வசனம்.

·        பாடல்கள்                   :400 ( 34 அதிகாரங்கள்)

·        இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடல் மூலம் ஆசிரியர் சமண சமயத்தை               சார்ந்தவர் என அறிய முடிகிறது.

·        ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி இருக்கும்.

·        இந்நூலில் உள்ள அனைத்தும் இலக்கியப் பழமொழிகளே.

·        தொல்காப்பியர் பழமொழியை "முதுசொல்" என்று குறிப்பிடுகிறார்.

·         சங்ககால மன்னர்கள், புலவர்கள், மூவேந்தர்கள் பற்றிய குறிப்புகள் உள்ள நூல்.

·        பதினெ ண் கீழ்க்கணக்கு நூல்களுள் வரலாற்றை மிகுதியாக கூறும் நூல் .

·        நீதி நூல்களுள் திருக்குறள் நாலடியாருக்கு அடுத்துப், புகழ்பெற்ற நூல்.

   

“மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்

                 பாரிமடமகள் பாண்மகற்கு - நீர் உலையுள்

  பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்

                 ஒன்றாகு முன்றிலோ இல்"                      -முன்றுரையரையனார் 

 

 

சொற்பொருள்:

        மாரி மழை புகவர் - உணவாக மடமகள் இளமகள் முன்றில் வீட்டின் முன் இடம் (திண்ணை)

பாடலின் பொருள்:

       மழையின்றி வறட்சி நிலவிய காலத்தில், வாளல் பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை ஆகியோரிடம் பாணர்கள் இரந்து நின்றனர். பாரிமகளிர் உலைநீரில் பொன் இட்டு அவர்களுக்குத் தந்தனர்.

       இப்பாடலில் உள்ள பபொழி: "ஒன்றாகு முன்நினோ இல்". இதன் பொருள் :ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை                                                                                                                                                

 "ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்                    நாற்றிசையும் செல்வாத நாடில்லை; அறிகாடு                             வேற்றுநாடு ஆகா; தமவேயாம்; ஆயினால்                                       ஆற்றுணா வேண்டுவது இல்".                   -முன்றுரையரையனார்

 

சொற்பொருள்:

v  ஆற்றவும் - நிறைவாக, ஆறு - வழி: உண உணவு: தமவேயாம் - தம்முடைய நாடே, ஆற்றுணா - ஆறு + உணா

மேற்கோள்: 

v  "கற்றலின் கேட்டலே நன்று"

v  "குன்றின் மேல் இட்ட விளக்கு"

v  “தனிமரம் காடாதல் இல்"

v  “திங்களை நாய்க் குறைத்தற்று”

v  “நிறைகுடம்த்ததும்பல் இல்”

v  “நுணலும் தன்வாயால் கெடும்"

v  “ பாம்புறியும் பாம்பின் கால்”                                 

v  “முறைக்கு மூப்பு இளமை இல்[ கரிகாலன்]

v  " கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான் (மனுநீதிச் சோழன்)   

v  "பாரதத் துள்ளும் பணையம் தம் தாயமா" (பாரதம்)

v  "பொலந்தார் இராமன் துணையாகப் போதந்து

இலங்கைக் கிழவற்கு இளையோன்.."

- என்று இராமாயணக் கதையை குறிப்பிடுகிறது

v  "முதலில்லார்க்கு ஊதியமில்

v  "புல்மேயா தாகும் புலி"

v  "தமக்கு மருத்துவர் தாம்

v   "அணியெல்லாம் ஆடையின் பின்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.