பிரபலங்களின் முக்கிய மேற்கோள்கள்
Kalvi Imayam
December 27, 2021
பிரபலங்களின் முக்கிய மேற்கோள்கள்
அண்ணா
- மறப்போம், மன்னிப்போம்!
- கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.
- எதையும் தாங்கும் இதயம் வேண்டும்!
- மாற்றான் தோர்ட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு!
பெரியார்
பட்டினத்தார்
- ஒன்றென்றிரு; தெய்வம் உண்டென்றிரு.
விவேகானந்தர்
- விழுமின், எழுமின் அயராது உழைமின்
- விழி,எழு, வெற்றிகிட்டும் வரை ஓயாதே!
திலகர்
- சுயராஜ்யம் எனது பிறப்புரிமை, அதை அடைந்தே தீருவேன்!
காந்திஜி
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
- தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு
- மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!
நாமக்கல் கவிஞர்(வெ.ராமலிங்கம் பிள்ளை)
- தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
- தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு!
- கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்!
- கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது.
- கூட்டுறவில் சேருங்கள். கூடிவாழப்பழகுங்கள்!
- சத்தியம் நம்மிற்குறைந்ததால் பல சங்கடம் வந்து சேர்ந்ததே.
பாரதிதாசன்
- பாரடா உன் மானிட சமுத்திரத்தை
- உயிரை,உணர்வை வளர்ப்பது தமிழே
- கொலை வாளினை எட்டா. வெகுகொடியோர் செயல் அறவே
- தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
- மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள்.
- நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்.
- இருட்டறையில் உள்ளதடா உலகம்.
- ஓடப்பர் உயரப்பர் எல்லாம் ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!
- புதியதோர் உலகம் செய்வோம்!
பாரதியார்
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!
- யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!
- மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!
- நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ. தனியொருவனுக்கு
- உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!
- நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்.
- அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே!
- காக்கை குருவி எங்கள் ஜாதி... காக்கைச் சிறகினிலே நந்தலாலா.
- ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
- பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்.
- கொட்டு முரசே! கொட்டு முரசே!
- எண்ணிய முடிதல் வேண்டும். நல்லவே எண்ணல் வேண்டும்!
- என்று தணியும் இந்த சுதந்திர தாகம் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!
- பாரத பூமி பழம்பெரும் பூமி, நீரதன் புதல்வர் இந்நினைவு அகற்றாதீர்! தெய்வம் பலப்பல சொல்லிப்பகைத்தீயை வளர்ப்பவர் மூடர் நாடும் மொழியும் நமதிரு கண்கள்.
கபிலர்
- உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ!
- நன்றே செய்தல் வேண்டும் நன்றும் இன்றே செய்தல் வேண்டும்!
திருமூலர்
- ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
- உடம்பால் அழியின் உயிரார் அழிவர்
- அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்...
- உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!
இராமலிங்க அடிகள்
- வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்.
- அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
- உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்றுபேசுவார் உறவு கலவாமை வேண்டும்
திருஞானசம்பந்தர்
- காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
சுந்தரர்
- பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
- பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து.
திருநாவுக்கரசர்
- என் கடன் பணி செய்து கிடப்பதே
- நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
- மாசில் வீணையும் மாலை மதியமும்
- இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
- ஈசன் எந்தன் இணையடி நிழலே